தேவையான பொருட்கள் :
மணத்தக்காளி வத்தல் - 25 கிராம்
சின்ன வெங்காயம் -5
பூண்டு - 7 பற்கள்
தக்காளி - 1
கடுகு - 1/4 tsp
கடலைப்பருப்பு - 1/4 tsp
வெந்தயம் - 1/4 tsp
காய்ந்த மிளகாய் - 2,
புளி - ஒரு எலுமிச்சை அளவு,
குழம்பு மிளகாய் தூள் - 3 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு,
நல்லெண்ணெய் - 4 tbsp
உப்பு - சிறிதளவு
செய்முறை :
முதலில் கடாய் வைத்து காய்ந்ததும் நல்லெண்ணெய் சேருங்கள். சூடானதும் கடுகு,
வெந்தயம், காய்ந்தமிளகாய் கடலைப்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளியுங்கள்.
பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்குங்கள். அதோடு மணத்தக்காளி வத்தலையும்
சேர்த்து வதக்குங்கள்.
10 நிமிடங்கள் கழித்து தக்காளி சேருங்கள்.
அடுத்ததாக மிளகாய்த்தூள் சேர்த்து வதக்குங்கள். பச்சை வாசனை போனதும் புளி கரைசலை சேருங்கள். போதுமான அளவு உப்பு சேர்த்து தட்டுபோட்டு மூடிவிடுங்கள்.
10 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து கிளறிவிட்டு அடுப்பை அணைத்து இறக்கிவிடவும் ..
No comments:
Post a Comment