தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 50 கிராம்
பூண்டு - 4 பல் (அரைத்தது)
சீரகம் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை கழுவி, குக்கரில் போட்டு 3 விசில் விட்டு இறக்கவும். பின் அதில் உள்ள நீரை வடித்து, கடலையை ஒரு பௌலில் போட்டுக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்.
பிறகு அதில் 2 கப் தண்ணீர் விட்டு, கொதிக்கவிடவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள கொண்டைக்கடலை, அரைத்த பூண்டு, கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து 15 நிமிடம் கொதிக்க விடவும்.
அதற்குள் மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் சீரகம் மற்றும் கறிவேப்பிலையை போட்டு தாளித்து, அந்த மசாலா கலவையில் ஊற்றி, ஒரு முறை பிரட்டி இறக்கவும்.