Thursday, June 27, 2013

ஆந்திரா மட்டன் குழம்பு



தேவையான பொருட்கள்:


மட்டன் - 700 கிராம் 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 2 (நறுக்கியது)
 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகு - 10 
பச்சை ஏலக்காய் - 5 
சோம்பு - 1/2 டீஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
மல்லி - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பட்டை - 1 இன்ச் 
கிராம்பு - 5 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
 மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது
 உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் மட்டன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய மட்டனை போட்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி, 4 விசில் விட்டு இறக்க வேண்டும். 
பின்னர் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சீரகம், கசகசா, மல்லி, மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் சோம்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். 
பின்பு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். 
அடுத்து ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். 
பிறகு அதில் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை கிளறி விட வேண்டும். 
பின் வேக வைத்துள்ள மட்டன் கலவையை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பொடி, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, நன்கு கிளறி, 2 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 
இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.


சிக்கன் ஆப்கானி


தேவையான பொருட்கள்: 

சிக்கன் - 1 கிலோ 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
ஏலக்காய் - 4 
பிரியாணி இலை - 4 
பட்டை - 1 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
குங்குமப்பூ - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

ஊற வைப்பதற்கு... 

தயிர் - 1 கப் 
வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன் 
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
 எள் - 2 டேபிள் ஸ்பூன் 
பூண்டு - 4 பற்கள்

செய்முறை: 

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் முந்திரி, எள், பூண்டு சேர்த்து நன்கு நைஸாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 
அடுத்து கழுவிய சிக்கனில் அரைத்த முந்திரி பேஸ்ட், வெங்காய பேஸ்ட், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
3 மணிநேரம் ஆனப் பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். 
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும். 
பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, 15 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட வேண்டும். 
பின் உப்பு, கரம் மசாலா, மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் பிரட்டி விட வேண்டும். 
அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 
மூடி வைத்து 20-25 நிமிடம் தீயை குறைவில் வைத்து, 
சிக்கனை வேக வைக்க வேண்டும். 
சிக்கனானது வெந்ததும், அடுப்பை அணைத்து, கொத்தமல்லி மற்றும் குங்குமப்பூவை தூவி அலங்கரித்தால், சுவையான சிக்கன் ஆப்கானி ரெடி!!!

பஞ்சாபி சிக்கன் மசாலா



தேவையான பொருட்கள்:

 சிக்கன் - 500 கிராம் 
வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது) 
தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் 
ஏலக்காய் - 4 
பட்டை - 1 
சீரகம் - 1 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு 
கடுகு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் (விருப்பமான எண்ணெய்) 
தண்ணீர் - தேவையான அளவு 
ஸ்பெஷல் பஞ்சாபி கரம் மசாலாவிற்கு... மல்லி - 2 டீஸ்பூன் 
சீரகம் - 2 டீஸ்பூன் 
பட்டை - 1 
வெந்தயம் - 1/2 டீஸ்பூன் 
மிளகு - 2 டேபிள் ஸ்பூன் 
பிரியாணி இலை - 2 

செய்முறை: 

முதலில் கரம் மசாலாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும், மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
பின்னர் சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் கழுவி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். 
பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும். 
பின்பு நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். 
கலவையானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டி விட்டு, 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். 
பின் உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 20 நிமிடம் மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.