தேவையான பொருட்கள்
வெள்ளாட்டு கறி 500 கிராம்
சின்ன வெங்காயம் 1 கப் ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)
இஞ்சி விழுது 1 மேஜைகரண்டி
பூண்டு 1/4 கப் ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)
பச்சை மிளகாய் 16 ( அம்மிகல்லில் மையாக நசுக்கியது)
கல் உப்பு தேவையான அளவு
கறிவேப்பில்ல கொஞ்சமாக
பட்டை 2 இன்ச்
கிராம்பு 6
சோம்பு 1/2 தேக்கரண்டி
குருமிளகு 1 மேஜைக்கரண்டி ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)
கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி
மரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி
செய்முறை
1. இப்பொழுது அதில் 2 மேஜைக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் விட்டு அதில் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும் அதில் சோம்பை போட்டு பொரிய ஆரம்பித்ததும் பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
2. பிறகு அதில் கறிவேப்பில்ல சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் , அதில் ஆட்டிறைச்சி கொழுப்பை சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
4. இப்பொழுது அதில் இஞ்சி விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. பிறகு அதில் அம்மிகல்லில் நசுக்கிய பூண்டையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
6. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பில்ல சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
7. அதன் பிறகு அதில் அம்மி கல்லில் மையமாக விழுதாக அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.
8. இப்பொழுது அதில் மையாக அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
9.அதில் நன்றாக சுத்தமாக கழுவி வைத்துள்ள ஆட்டிறைச்சியை சேர்த்து அதில் தேவையான அளவிலான கல் உப்பை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
10. பிறகு அதில் 2 கப் தண்ணீர்சேர்த்து நன்றாக மூடியை மூடி கறி வேகும் வரை அடுப்பை சிறுதீயிலே வைத்து வேகவைத்து கொள்ள வேண்டும். கவனம் தேவை கறி அடிபிடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் வற்றினால் மறுபடியும் சேர்த்து கொள்ள வேண்டும்.
11. கறி நன்றாக வெந்த உடன் அதில் அரைத்து வைத்துள்ள குரு மிளகு சேர்த்து நன்றாக சிறுதீயிலேயே கொதிக்க வைக்க வேண்டும் .
12. அதில் அவ்வபோது சிறிய சிறிய மரசெக்கு கடலெண்ணய் விட்டு நன்றாக சிறு தீயிலேயே வதக்க வேண்டும் , பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்