Thursday, November 10, 2016

மட்டன் உருளைக்கிழங்கு சால்னா


சூப்பரான மட்டன் உருளைக்கிழங்கு சால்னா
தேவையான பொருட்கள் :

மட்டன் - 1 கிலோ
உருளைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி -  1/2 கிலோ
பச்சை மிளகாய் - 8
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
த‌னியா தூள் - 1/2  தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் - 1/4 தேக்க‌ர‌ண்டி
த‌யிர் - 1 கப்
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்க‌ர‌ண்டி
கொத்தம‌ல்லி த‌ழை - அரை கட்டு
புதினா - கால் கட்டு
தேங்காய் - கால் கப்
முந்திரி - 25 கிராம்
க‌ச‌க‌சா  - 2 தேக்க‌ர‌ண்டி
எலுமிச்சை ப‌ழ‌ம் -  1 (சிறியது)
ப‌ட்டை - இர‌ண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 3

செய்முறை :

 ம‌ட்ட‌னை நன்றாக சுத்தம் செய்து 5 அல்லது 6 முறை த‌ண்ணீரில் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக‌ட்ட‌வும்.
வெங்க‌யாம், த‌க்காளியை பொடியாக நறுக்கி வைக்க‌வும்.
கொத்தம‌ல்லி, புதினாவை ஆய்ந்து, க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்கவும்.
 முந்திரி, தேங்காய், க‌ச‌கசா சேர்த்து மையாக‌ அரைத்து வைக்க‌வும்.
உருளைக்கிழ‌ங்கை தோலை உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ள‌வும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின் அதனுடன் வெங்காயத்தை போட்டு தீயை மிதமாக வைத்து வதக்கவும்.
அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கி விட்டு, இஞ்சி பூண்டின் வாசனை அடங்கி நிறம் மாறும் வரை சிம்மில் வைக்கவும்.
 கொத்தமல்லி, புதினாவில் முக்கால் பாகத்தை சேர்த்து நன்கு வதக்கிய பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து மூடி விடவும்.
பிற‌கு மிள‌காய் தூள், த‌னியாதூள், ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து ம‌சாலா ந‌ன்கு தக்காளியோடு சேரும் வ‌ரை கிள‌றி அதில் ம‌ட்ட‌ன் மற்றும் த‌யிர் சேர்க்க‌வும். தீயை குறைத்து வைத்து கிளறி எல்லா ம‌சாலா வ‌கைக‌ளும் க‌றியில் சேரும்படி ஐந்து நிமிட‌ம் விடவும்.
 கறி மசாலா கலவையில் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்.
 நறுக்கி வைத்திருக்கும்‌ உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு முறை கிள‌றி இர‌ண்டு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து குக்கரை மூடி தீயை மித‌மாக‌ வைத்து 8 விசில் விட்டு இறக்க‌வும்.
குக்க‌ர் ஆவி அட‌ங்கிய‌தும் திற‌ந்து வெந்த‌ சால்னாவை வேறு ஒரு வாய‌க‌ன்ற‌ பாத்திரத்திற்கு மாற்றி அரைத்து வைத்துள்ள‌ தேங்காய் முந்திரி க‌ல‌வையை ஊற்ற‌வும். ந‌ன்கு‌ தேங்காய் வாசனை அட‌ங்கும் வ‌ரை கொதிக்க‌ விட்டு கடைசியாக மீதி உள்ள‌ கொத்தம‌ல்லி, புதினாவை சேர்த்து இற‌க்க‌வும்.

Friday, November 4, 2016

கேரளா மட்டன் ரோஸ்ட்



தேவையான பொருட்கள் :

மட்டன் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பொட்டுக்கடலை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு…

சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 5
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 6 பெரிய பற்கள்

செய்முறை :

 முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். கழுவி மட்டனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி, அதனை குக்கரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை அடுப்பில் வேக வைக்க வேண்டும். மட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் மட்டனை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்ட வேண்டும்.
கடைசியாக அதில் பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து 10 நிமிடம் பிரட்டி இறக்கவும் ..

மட்டன் குடல் குழம்பு



தேவையான பொருட்கள் :

ஆட்டு குடல் - 750 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 4
தேங்காய் - ஒரு மூடி அரைத்தது (கசகசாவுடன் )
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா - கொஞ்சம்
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு சிட்டிகை
உப்பு  - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு

செய்முறை :

 வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.(தயிர், மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும்) குக்கரில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, மஞ்சள் தூள் சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி (கொஞ்சம் தாராளமாக ) பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின் நறுக்கின வெங்காயதை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
அடுத்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து மைய வதக்கவும்.
இப்பொழுது மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அடுத்து வேக வைத்த குடலை போடவும். நன்றாக கொதி வரும் போது அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். ஓரங்களில் எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வரும் போது கொத்தமல்லி, புதினா தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

கும்பகோணம் நாட்டுக்கோழி குழம்பு



தேவையான பொருட்கள் :
நாட்டுக்கோழி கறி - 1 கிலோ,
வெங்காயம் - 4,
தக்காளி - 2 சிறியது,
பூண்டு - 15 பல்,
இஞ்சி - 2 அங்குல துண்டு.

தாளிக்க :
ந.எண்ணெய் - 2 டீஸ்பூன்,
பட்டை - 2 துண்டு,
சோம்பு - 1 டீஸ்பூன்,
தாளிக்கும் வடகம் - 1 டீஸ்பூன்.

வறுத்து அரைக்க :
தனியா - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 15,
மிளகு - 30 கிராம்,
சோம்பு - 2 மேஜைக்கரண்டி,
உப்பு, எண்ணெய், மஞ்சள்தூள் தேவைக்கேற்ப.

செய்முறை :

 தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.கோழிக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
 தனியா, மிளகாய், மிளகு மற்றும் சோம்பை நன்கு சிவக்க வறுத்து மிக்சியில் பொடி செய்து பின்பு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து வைக்கவும்.
குக்கரில் கோழிக்கறியை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி பூண்டு, இஞ்சி, அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 விசில் வரும் வரையில் வேகவிட்டு இறக்கவும். தேவையானால் குழம்பு பதத்திற்கு மேலும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, சிறிது சோம்பு மற்றும் தாளிக்கும் வடகம் சேர்த்து பொரிந்ததும் குழம்பில் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் மூடி போட்டு கொதிக்க விட்டு பின்பு பரிமாறவும். 

மட்டன் கீமா தோசை



தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
மட்டன் கீமா - 1 கப்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பட்டை - 1
கிராம்பு - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

 முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் 5 மணிநேரம் ஊற வைத்து நன்றாக ஊறியதும் தோசை மாவு பதத்திற்கு அரைத்து, உப்பு சேர்த்து கரைத்து 5 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 மட்டன் கீமாவை நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு மட்டன் கீமா, மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, மட்டன் நன்கு வேகும் வரை பிரட்ட வேண்டும். வேண்டுமெனில், அதில் சிறிது எண்ணெயை சேர்த்து மட்டனை வேக வைக்கலாம். மட்டன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
 தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், மாவைக் தோசையாக ஊற்றி அதன் மேல் தூவியது போல் மட்டன் கீமாவை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

Saturday, July 2, 2016

சிக்கன் ஆப்கானி
















தேவையான பொருட்கள்,

சிக்கன் - முக்கால் கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 4
பிரியாணி இலை - 4
பட்டை - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

ஊற வைப்பதற்கு,
தயிர் - 1 கப்
வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
எள் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்

செய்முறை,

 சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் முந்திரி, எள், பூண்டு சேர்த்து நைசாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த முந்திரி பேஸ்ட், வெங்காய பேஸ்ட், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து கலந்து, 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
3 மணிநேரம் ஆனப் பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்த பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, 20 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
பின் உப்பு, கரம் மசாலா, மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.
அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 25 நிமிடம் தீயை குறைவில் வைத்து, சிக்கனை வேக வைக்க வேண்டும்.
சிக்கன் வெந்ததும், அடுப்பை அணைத்து, கொத்தமல்லி மற்றும் குங்குமப்பூவை தூவி அலங்கரிக்கவும்.

மட்டன் நீலகிரி குருமா















தேவையானவை 

மட்டன் - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

தாளிக்க :
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2

அரைக்க 1 :
தேங்காய் - 2 துண்டு
கசகசா - ஒரு தேக்கரண்டி 

அரைக்க 2 :
புதினா, கொத்தமல்லி - தலா அரை கைப்பிடி கட்டு
பச்சை மிளகாய் - 2

செய்முறை 

குக்கரில் மட்டனுடன் மஞ்சள் தூள், ஒரு பிரிஞ்சி இலை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.
அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கலவை கொதித்ததும் தீயை மிதமாக வைத்து அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
கொதித்ததும் வேக வைத்த மட்டனை சேர்த்து உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
மட்டனுடன் சேர்ந்து நன்கு கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் புதினா விழுதை சேர்த்து கொதிக்க விடவும். குருமா கெட்டியானதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

மட்டன் ட்ரை ஃப்ரை



தேவையானவை

மட்டன் - 350 கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தயிர் - 100 மில்லி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2

செய்முறை
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும். அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
மட்டன் வதங்கியதும் தயிர் மற்றும் சீரகம் சேர்த்து பிரட்டி விடவும்.
மட்டன் வேக அதில் இருக்கும் தண்ணீரே போதுமானது, தேவையெனில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சிம்மில் வைத்து வேக விடவும்.
மட்டன் வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

Friday, July 1, 2016

கப்ஸா பிரியாணி




தேவையான பொருட்கள் :

முழு கோழி - 1
அரிசி - அரை கிலோ (2 1/2 ஆழாக்கு)
எண்ணெய் - 50 மில்லி
பட்டை ஒரு விரல் நீளம் - இரண்டு
ஏலக்காய் - மூன்று
கிராம்பு - நான்கு
வெங்காயம் - மூன்று
தக்காளி - மூன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* முழு கோழியை சுத்தம் செய்யவும்.
* அரிசியை இருபது நிமிடம் ஊறவைக்கவும்.
* அரிசி ஒன்றுக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் என்றால் 3 3/4 அளவு வரும். நான்கு டம்ளராக எடுத்து கொண்டு சுத்தம் செய்த கோழியை முழுவதுமாக அப்படியே போட்டு வேக விடவும்.
* வேக வைத்து அந்த தண்ணீரை தனியாகவும், கோழியை தனியாகவும் வைக்கவும்.
* சட்டியை காயவைத்து அதில் எண்ணெய், பட்டரை ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும். சிவக்க விட வேண்டாம்.
* பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கி தனியாக வைத்துள்ள கோழி தண்ணீரை அதில் ஊற்றி கொதிக்க விடவும்.
* கொதிவந்ததும் அரிசியை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு வேக வைத்துள்ள கோழியையும் சேர்த்து தீயை குறைத்து தம் போட்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

Thursday, June 2, 2016

கேரளா - கொ‌ண்ட‌க் கடலை‌ குழ‌ம்பு





தேவையானப் பொருட்கள்
கொண்டக்கடலை  250
வெங்காயம் – 100தக்காளி – 2
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 5
தேங்காய்  அரை மூடி
புளி – நெல்லிக்காய் அளவு
மிளகாய்த் தூள்  1 ஸ்பூன்
மல்லித் தூள் – ஸ்பூன்
ம‌ஞ்ச‌ள் தூ‌ள்  1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கடுகுஉளுந்து, சீரகம், மிளகு, சோம்பு – தாளிக்க 
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லி இலை

செய்முறை
கொண்டைக் கடலையை இரவே ஊறவைத்து விடவும்.
கு‌க்கரை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்றிக் கா‌‌ய்‌ந்தது‌ம் கடுகு,உளுந்துசீரகம், மிளகு, சோம்புகறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
அத்துடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போ‌ட்டு நன்கு வதக்கியதும். ‌த‌க்கா‌ளியை‌ப் சேர்த்து நன்கு வதக்கவும்.
த‌க்கா‌ளி வத‌ங்‌கியது‌ம் ம‌ஞ்ச‌ள் தூ‌ள்‌‌மிளகா‌ய் தூ‌ள்மல்லித் தூள்,ஆ‌கியவ‌ற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
அத்துடன் ஊ‌றிய கடலையை போட்டு நன்கு கிளறிய பின்புதண்ணீரில் புளியை கரைத்து அதில் ஊற்றவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்த தேங்காயை அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கு‌க்கரை மூடி 5 விசில் வந்ததும் மல்லி இலை தூவி இறக்கி விடவும்.
உருளைக்கிழங்கு சேர்த்தால் சுவை இன்னும் அதிகரிக்கும்.

மீன் பிரியாணி





தேவையான பொருட்கள்

மீன்  – 1 KG (முள்ளு இல்லாத எந்த மீனாக இருக்கவேண்டும் )
பாசுமதி அரிசி –  1 KG
தக்காளி  – 1/2 KG
பெ..வெங்கயம் – 1/4 KG
தயிர் – 1/2 CUP
பச்சைமிளகாய் – 5
நெய் – 1/4 CUP
எண்ணெய் – 1 CUP
எலுமிச்சம்பழம் – 2
கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு,பட்டை,விழுது – 5 ஸ்பூன்
பிரிஞ்சி இலை – சிறிது
சோம்பு,கசகசா – 3 ஸ்பூன்
ஜாதிக்காய்,ஜாதிரம்,ஜாதிபத்ரி – 10 gm
முந்திரி,திராட்சை – 20 gm
ஏலக்காய் – 5
உப்பு – தேவைக்கு
கறிவேப்பிலை,புதினா,மல்லிதழை – தலா 1 கைப்பிடி

செய்முறை:-
 
மீன் தயாரிக்க

முதலில் மீனை சுத்தம் செய்து துண்டு போடவும், பின் அதில் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் அரை வேக்காடாக பொரித்து எடுத்து முள் நீக்கி பிசிறி வைக்கவும்.
 
நெய் சாதம் தயாரிக்க
 பாசுமதி அரிசியை கழுவி சிறிது நேரம் கழித்து உப்பு.பட்டை,கிராம்பு,ஏலக்காய் சிறிது நெய் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வெந்ததும் வடித்து சாதத்தை தனியே வைக்கவும்.(குக்கரிலும் வைக்கலாம்)
 
அரைக்க வேண்டியவை
இஞ்சி, பூண்டு, பட்டை சேர்த்து அரைக்கவும்.
சோம்பு, கசகசா  இரண்டையும் அரைக்கவும்.
ஜாதிக்காய், ஜாதிரம், ஜாதிபத்ரி வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து தனியே வைக்கவும்.

மசாலா தயாரிக்க
 வணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
 பின்பு கறிவேப்பிலை, புதினா, மல்லிதழை போட்டு வதக்கி.
 அத்துடன் சோம்பு, கசகசா விழுது சேர்த்து பின் இஞ்சி,பூண்டு,பட்டை விழுது சேர்த்து வதக்கவும்.
 அத்துடன் கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் , மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி
தயிர், ஜாதிக்காய் வாசனைப்பொடி, போட்டு அத்துடன் பச்சைமிளகாய் தட்டி போட்டு நன்கு வதக்கவும்.
முந்திரி,திராட்சையை சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சம்பழத்தை பிழிந்து விடவும்.

பிரியாணி கலக்க
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின்பு மசாலாவை பரப்பி அதன் மேல் மீனை பரவலாக பிசிறி விடவும்.
அடுத்து சாத்தை எடுத்து கொஞ்சமாக பரப்பவும், சாதத்தின் மேல் சிறிது எண்ணெய் விடவும்.
இதேபோல் மசாலா, மீன், சாதம் அடுக்குகள் என இரு முறை செய்யவும்.
பின்பு குக்கரை மூடி 10 நிமிடம் சிம்மில் வைக்கவும், ஒரு விசில் வரும் முன்னே அடுப்பை அனைத்து விடவும்.
சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பரிமாறலாம்.

கத்திரிக்காய் பிரியாணி



தேவையானப் பொருட்கள்
  • அரிசி – 2 கப்
  • கத்திரிக்காய்  கால் கிலோ
  • பெரிய வெங்காயம் – 4
  • தக்காளி – கால் கிலோ
  • பச்சை மிளகாய்  5
  • தயிர் – ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  • தேங்காய்பால் – 1/2 கப்
  • சோம்பு – 1/2 ஸ்பூன்
  • பட்டை – 1
  • கிராம்பு – 1
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
  • மல்லித்தூள் – 3 ஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 50 கிராம்
  • முந்திரி – 10 கிராம்
  • எண்ணெய்  தேவையான அளவு
  • நெய் – 50 கிராம்
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து அத்தனுடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கி அதனுடன் கத்திரிக்காய் (நீளவாக்கில் நறுக்கவும்) போட்டு நன்கு வதக்கவும்.
கத்திரிக்காய் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கியவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் தயிர், தேங்காய்பால் ஊற்றி வதக்கி அரிசியையும் போட்டு நன்கு கிளறவும்.
 4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும்,நெய் ஊற்றி கொத்தமல்லி தூவி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 5நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து முந்திரி, கடலைப்பருப்பு (வறுக்கவும்) போட்டு சாதம் உடையாமல் கிளறி பரிமாறலாம்.

முருங்கக்காய்-கத்திரிகாய்-மாங்காய் சாம்பார்



தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு – 1 கப்
முருங்கக்காய் – 2
உருளைக்கிழங்கு – 3
கத்திரிகாய் – 5
மாங்காய் – 1 (கிளிமூக்கு மாங்காய்)
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 2
பூண்டு – 5 பல்
மஞ்சள்த்தூள் – 1/2 ஸ்பூன்
சாம்பார்த்தூள் – 3 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
தாளிக்க
 எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு,உளுந்து – 1/2 ஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது

செய்முறை
ஒரு கனமான பாத்திரத்தில் துவரம்பருப்பை (நன்கு கழுவிடவும்) போட்டு பருப்பு மூழ்கும் அளவிற்க்கு தண்ணிர் விட்டு அதனுடன் மஞ்சத்தூள், சீரகம் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
பருப்பு முக்கால் பாகம் வெந்ததும் தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து ஒரு 10 நிமிடம் வேகவைக்கவும்.
பிறகு நறுக்கிய முருங்கக்காய், உருளைக்கிழங்கு, கத்திரிகாய், மாங்காய் போட்டு வேக வைக்கவும். ( காய் போடறதுக்கு முன்னாடி சாம்பாருக்கு தேவையான தண்ணீர் ஊற்றவும்-காய் போட்ட பிறகு ஊற்றினால் காய் சரியா வேகாது+சாம்பார் சுவையாக இருக்காது )
காய் வெந்ததும் சாம்பார்த்தூள் சேர்த்து அத்துடன் தேவையான உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லி தூவினால் அவ்வளவுதான் சுவையான சாம்பார் தயார்


பின் குறிப்பு ; -
பருப்பை குக்கரில் வேகவைத்தால் சாம்பாரின் சுவை முழுமையாக கிடைக்காது.
பாத்திரத்தில் பருப்பு சீக்கிரம் வேக வேண்டும் என்றால் பருப்பு வேகும் போது சிறிது நல்லெண்ணெய் விட்டால் போதும் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.
மாங்காய் சேர்ப்பதால புளி தண்ணி தேவையில்லை.
பொருங்காயம் தேவையென்றால் தாளிக்கும் போது சிறிது  சேர்த்துகொள்ளவும் 

ரவா கேசரி




தேவையான பொருட்கள்;

 ரவா       –   100 கிராம்
சர்க்கரை   –   150 கிராம் (தேவைக்கு)
நெய்       –   50 கிராம் (தேவைக்கு)
முந்திரி    –   5
திராட்சை   –  5
ஏலக்காய்    – 5
கேசரி பவுடர் – தேவைக்கு
தண்ணிர்     – 3 டம்ளர்

செய்முறை;

ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு நன்கு பொன்னிரமாக வறுத்துக் கொள்ளவும். நொய்யில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணிரை ஊற்றி அத்துடன் கேசரி பவுடரையும் சேர்த்து நான்கு கொதிக்கவைக்கவும்
கொதித்த தண்ணிரில் ரவையை சேர்த்து நன்கு கிளறி விடவும், ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

அதனுடன் நெய்யை சேர்த்து நன்கு கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு இறக்கினால் சுவையான ரவா கேசரி ரெடி.    

மீன் ஊறுகாய்



தேவையான பொருட்கள்

மீன் (முள் நீக்கியது) – 1 கிலோ
இஞ்சி – 125 கிராம்
பூண்டு – 125 கிராம்
கடுகு – 60 கிராம்
மஞ்சள் பொடி – 1 மேஜைக்கரண்டி
சர்க்கரை – 1 கோப்பை
வினிகர் – 400 கிராம்
மிளகாய் வற்றல் – 60 கிராம்
சீரகம் – 35 கிராம்
உப்பு – 2 மேஜைக்கரண்டி
கடலை எண்ணெய் – 1/2 கிலோ
மிளகாய்தூள் – 1 மேஜைக்கரண்டி

செய்முறை

மீனை ஒரு அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
உப்பு, மிளகாய்த்தூள் தடவி 1 மணிநேரம் ஊர வைக்கவும்.
எண்ணெயை நன்றாக சூடாக்கி மீன் துண்டுகளை பொறித்தெடுக்கவும்.
இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
 எண்ணெயை சூடாக்கி அரைத்த மசாலாவை நன்றாக வதக்கவும்.
மீன், வினிகர், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும் ,சூடு ஆறிய பிறகு காற்று புகாத  கண்டைனரில்,அல்லது பீங்கன் ஜாரில்   மாற்றி வைத்து கொள்ளவும் ...

மட்டன் மிளகு கறி




தேவையான பொருட்கள்:


மட்டன் – அரை கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள்  1/2  ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 1/2  ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
   உப்பு – தேவையான அளவு

மசாலாவுக்கு

மிளகு  – 1 ஸ்பூன்
சீரகம்  – 1 ஸ்பூன்
சோம்பு  1/2  ஸ்பூன்
வரமிளகாய் – 4
மல்லித்தூள்(அ)முழு மல்லி – 1 ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
முந்திரி  ஐந்து
ஏலக்காய்  3
தேங்காய்  பாதி (ஒரு மூடியில்)
இஞ்சி   –  நெல்லிக்காய் அளவு
பூண்டு  –  5-6 பல்

செய்முறை:

முதலில் மசாலாவுக்கு உரிய மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய், மல்லித்தூள்(அ)முழு மல்லி, பட்டை, கிராம்பு, முந்திரி, ஏலக்காய், தேங்காய், இஞ்சி, பூண்டு என அனைத்தையும் சிறிது தண்ணீர்சேர்த்து நன்கு அரைத்து கெள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மட்டன், மஞ்சள் தூள்உப்பு ,வெங்காயம்மற்றும் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து வைத்துக் கெள்ளவும்.
அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கெள்ளவும்.

கலந்து வைத்த மட்டன் கலவையை 10-15 நிமிடம் ஊறவைக்கவும்

ஒரு கனமான வாணலியில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது இரண்டையும் நன்கு வதக்கி அதனுடன் ஊற வைத்த மட்டன் கலவையையும் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும்.

தண்ணி தேவைபட்டால் சிறிது ஊற்றி நன்கு வேகவிட்டு புதினா கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Thursday, April 7, 2016

மகாராஷ்டிரா முட்டை குழம்பு


Saoji Maharashtrian Egg Curry


தேவையான பொருட்கள்: 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
தேங்காய் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் 
காஷ்மீரி வர மிளகாய் - 5 
ஜாதிக்காய் - 1 
கசகசா - 1/2 டீஸ்பூன் 
மல்லி - 1/2 டீஸ்பூன் 
சோம்பு - 1/4 டீஸ்பூன் 
சீரகம் - 1/4 டீஸ்பூன் 
பட்டை - 2 
ஏலக்காய் - 3 
கிராம்பு - 3 
தக்காளி - 3 (நறுக்கியது) 
பசலைக்கீரை - 1/4 கப் 
வேக வைத்த முட்டை - 4 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது 

செய்முறை: 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, மல்லி, ஜாதிக்காய், காஷ்மீரி வர மிளகாய், பட்டை, ஏலக்காய், கிரம்பு, சீரகம் சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய் பொடியையும் சேர்த்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும். பின் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து மிதமான தீயில் தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். பிறகு அதில் பசலைக்கீரை சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டிப் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு ரெடி!!!

பேச்சுலர் சாம்பார்


Bachelor Sambar Without Dal Recipe


தேவையான பொருட்கள்: 

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
கறிவேப்பிலை - சிறிது 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய - 1 (நீளமாக கீறியது) 
தக்காளி - 2 (நறுக்கியது) 
சாம்பார் பவுடர் - 2-3 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
சர்க்கரை - 1/2 டீஸ்பூன் 
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது 

செய்முறை: 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, சாம்பார் பொடி சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறினால், பேச்சுலர் சாம்பார் ரெடி

மட்டன் லிவர் மசாலா





தேவையான பொருட்கள்:
 மட்டன் லிவர்/ஈரல் - 500 கிராம்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தேங்காய் பொடி - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - 1
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
 எலுமிச்சை - 1
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு

 செய்முறை:
முதலில் ஈரலை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது பால் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 சிட்டிகை மிளகாய் தூள், உப்பு, எண்ணெய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள ஈரலை சேர்த்து 5 நிமிடம் கிளறி வேக வைத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தேங்காய் பொடி மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி 5-10 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும். மசாலா நன்கு வெந்ததும், அதில் ஈரல் துண்டுகளை சேர்த்து கிளறி, மூடி வைத்து 2-3 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை சாற்றினை மேலே பிழிந்தால், மட்டன் லிவர் மசாலா ரெடி!!!

Wednesday, March 23, 2016

வெந்தய மோர்க் குழம்பு




தேவையானவை

புளிப்பு மோர்-2கப்
வறுக்க வேண்டியவைகள் மிளகாய் வற்றல்- 2
தனியா 1டீஸ்பூன்
வெந்தியம்1டீஸ்பூன்,
அரிசி 1’டீஸ்பூன்,
துவரம் பருப்பு 1டீஸ்பூன்.
இவைகளை  சிறிது எண்ணெயில்  சிவக்க வறுத்துக்  கொள்ளவும்.

தேங்காய்த் துருவல் 2டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் சிறிது.
தாளிக்க- எண்ணெய்,
கடுகு அரை டீஸ்பூன்,
சிறிது மஞ்சள்பொடி,
ருசிக்குஉப்பு,
கறி வேப்பிலை சிறிது.

செய்முறை..

வறுத்த சாமான்களுடன் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து,    
உப்பு, மஞ்சள்பொடி பெருஙகாயம்  திட்டமாகச்  சேர்த்துமோரில் கரைக்கவும்.    எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து நிதானதீயில்  பால் பொங்கும் பதத்தில்,
மோர்க் கலவையைக் கொதிக்க வைத்து இறக்கவும்.  
காய்கள் விருப்பப்படி  சேர்க்கவும். காரமும் அப்படியே.
பருப்புத் துவையல் சாதங்கள், பொடிவகை சாதங்களுடன்,
சேர்த்துச் சாப்பிடநன்றாக இருக்கும்.
இதையே வறுத்தரைத்த வெந்தயப் பொடி, மிளகாய்ப் பொடி,  ஒருடீஸ்பூனகடலைமாவு,
பெருங்காயம்  உப்பு,  முதலியவற்றை புளிப்பு மோரில் கரைத்து ,
தேங்காயெண்ணெயில் கடுகை தாளித்து ஒரு கொதிவிட்டு  அவசரத்திற்கும் தயாரிக்கலாம்.
காய்கள் போடாவிட்டாலும் பரவாயில்லை.

Sunday, March 20, 2016

பருப்பு சாம்பார்



தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
புளி தண்ணீர் - 1/2 கப் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
கடுகு - 1 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
பெருங்காயத்தூள் - சிறிது 
கொத்தமல்லி - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 


செய்முறை: முதலில் துவரம் பருப்பை 1/2 மணிநேரம் ஊற வைத்து,
பின் அதனை கழுவி குக்கரில் போட்டு, 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 
மஞ்சள் தூள் மற்றும் தக்காளியைப் போட்டு, மூடி, 2-3 விசில் விட்டு இறக்கவும். விசில் போனதும், அதில் உள்ள நீரை ஓரளவு வடிகட்டி, 
வேக வைத்த பருப்பு மற்றும் தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஓரளவு கடைந்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். 
பிறகு வெங்காயம் மற்றும் உப்பை போட்டு வதக்கவும். வதங்கியதும், அதில் கடைந்து வைத்துள்ள பருப்பை போட்டு ஒரு முறை கொதிக்க விடவும். பின்னர் அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து, வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் ஊற்றி, 
பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். 
(அதிகமாக தண்ணீர் ஊற்றி விட வேண்டாம். ஏனெனில் இன்னும் புளித் தண்ணீர் உள்ளது.) பச்சை வாசனை போனதும், அதில் புளியை ஊற்றி, உப்பு அளவை சரிபார்த்து, நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லியை தூவவும்.