தேவையான பொருட்கள்:
மட்டன் - 1 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 8
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 5
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து,
அதில் மட்டனைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி,
மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து,
மூடி வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின் மிக்ஸியில் வரமிளகாய், சீரகம், மல்லி,
மிளகு, கடுகு, கசகசா ஆகியவற்றைப் போட்டு,
தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை,
ஏலக்காய், பட்டை ஆகியவற்றைப் போட்டு
தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு,
4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி,
வேக வைத்துள்ள மட்டனை போட்டு கிளறி,
3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இறுதியில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை போட்டு,
மட்டனில் மசாலா நன்கு ஒட்டுமாறு பிரட்டி விட வேண்டும்.
பிறகு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கிளறி,
7-8 நிமிடம் தொடர்ந்து பிரட்டி விடவும்.
கடைசியாக 3 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து
15 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சூப்பரான ஜங்லி மட்டன் குழம்பு ரெடி!!!