Monday, October 7, 2019

புளியோதரை என்ற புளிசோறு



















தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்து ஆற வைக்கப்பட்ட சாதம் – 3 கப்
புளி – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்

தாளிப்பதற்கான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் – 6
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
வேர்க்கடலை – 1/4 கப்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிது

வறுத்து பொடியாக்குவதற்க்கான பொருட்கள்:
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
 தனியா – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5

புளியோதரை செய்முறை:

புளியை தண்ணீரில் நன்கு கரைத்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவைக்கவும்
ஒரு வாணலியில் கடலை பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பை போட்டு மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். கொஞ்சம் வறுபட்ட நிலையில் அதில் தனியா, மிளகு, வெந்தயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். இந்த கலவை நன்கு வாசனை வர துவங்கியதும் அடுப்பை நிறுத்தி விடவேண்டும். பிறகு அந்த கலவையில் பெருங்காய தூள் சேர்த்து ஆறவிட வேண்டும். அனைத்தும் நன்கு ஆரிய உடன் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
இப்போது  வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட வேண்டும்.
கடுகு பொரிந்ததும், அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய்,
கருவேப்பிலை, பெருங்காய தூள், மஞ்சள் தூள் ஆகியயவற்றை
சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு இதில் வேர்க்கடலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இந்த கலவையில், நாம் இதற்கு முன்பு அரைத்து வைத்துள்ள
புளியோதரை பொடியை போட்டு நன்கு கலக்க வேண்டும்.
சிறிது நேரத்திற்கு பிறகு இதில் புளி  கரைசலை ஊற்ற வேண்டும்.
 பிறகு அது ஒரு அளவு கெட்டியாகும் வரை நன்கு கொதிக்கவிட்டு
 அதில் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
இந்த கலவை நன்கு கொதித்து கெட்டியான பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆறவிட வேண்டும். இப்போது சாப்பாட்டிற்கு தேவையான அளவு கலவையை எடுத்துக்கொண்டு அதில் சாதத்தை போட்டு கிளறினால் சுவையான புளியோதரை தயார். 

Thursday, September 5, 2019

மதுரை மட்டன் குருமா
























தேவையானவை:

 மட்டன் - ஒரு கிலோ
 கடலை எண்ணெய் - 100 மில்லி
 எலுமிச்சை - ஒன்று
 சீரகம் - 3 கிராம்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு

அரைக்க:

 சின்னவெங்காயம் - 200 கிராம்
 பச்சைமிளகாய் - 25 கிராம்
 தேங்காய் - ஒன்று
 கசகசா - 15 கிராம்
 மிளகு - 20 கிராம்
 சோம்பு - 3 கிராம்
 சீரகம் - 5 கிராம்
 பட்டை - சிறிதளவு
 கிராம்பு - ஒன்று
 அன்னாசிப்பூ - ஒன்று
 முந்திரிப்பருப்பு - 20 கிராம்

செய்முறை:

தேங்காயில் இருந்து கெட்டியான முதல் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து லேசாக வதக்கி, பேஸ்டாக அரைக்கவும். அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகத்தையும் கறிவேப்பிலையையும் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் மட்டனைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் 2 டம்ளர் தண்ணீர் விட்டு மட்டனை வேகவிடவும். மட்டன் வெந்ததும் எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதி வருவதற்கு முன்னர் இறக்கவும் 

சிக்கன் மக்ரோனி Indian Style


















தேவையான பொருட்கள் :


மக்ரோனி- 150 கிராம்
போன்லெஸ்  சிக்கன் -1/2 கிலோ
வெங்காயம்- 2
தக்காளி-1
கறிவேப்பிலை-1 கொத்து
பச்சைமிளகாய்-2
இஞ்சி,பூடு விழுது-3 ஸ்பூன்
தயிர்- 2 மேசை கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்
பட்டை-1 சிறு துண்டு
கிராம்பு-2
ஏலக்காய்-3
அன்னாசி பூ-2
பிரிஞ்சி-1
சிக்கன் மசாலா தூள்- 1 ஸ்பூன்
தனியா தூள்- 1/2 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய்- 3 மேசை கரண்டி
நெய்- 4 ஸ்பூன்

செய்முறை:


மக்ரோனியை உப்பு சேர்த்து அவித்து தண்ணீர் வடித்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை,ஏலக்காய்,கிராம்பு,அன்னாசி பூ, பிரிஞ்சி சேர்க்கவும்.
பின்னர் மிளகாய்,கறிவேப்பிலை,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் அதில் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும்.
அதில் தக்காளி பின்னர் எல்லாத்தூள்களையும், தயிர் சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் மேலே வந்ததும் சிக்கனை சேர்த்து நன்கு வேகவிடவும்.
சிக்கன் வெந்ததும் வேக வைத்த மக்ரோனியை சேர்த்து மசாலாவில் உள்ள நீர் வற்ற கிளறி பின் இறக்கவும் ...

இட்லி மஞ்சூரியன்



















தேவையானவை:

 இட்லி - 6
 எண்ணெய் - 100 மில்லி
 இஞ்சி - 5 கிராம்
 பூண்டு - 5 கிராம்
 பெரிய வெங்காயம் - 30 கிராம்
 பச்சைமிளகாய் - 7
 வெங்காயத்தாள் - 5
 செலரி இலைகள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 தக்காளி சாஸ் - 20 மில்லி
 சோயா சாஸ் - 10 மில்லி
 ரெட் சில்லி சாஸ் - 10 மில்லி
 தண்ணீர் - 30 மில்லி
 உப்பு - தேவையான அளவு

ஊற வைக்க:

 மைதா மாவு - 50 கிராம்
 கார்ன்ஃபிளார் மாவு - 20 கிராம்
 உப்பு - அரை டீஸ்பூன்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

ஊற வைக்கக் கொடுத்தவற்றை எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். ஒரு இட்லியை தலா ஆறு துண்டுகளாக்கி, இதை மாவில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இனி, இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், வெங்காயத்தாள், செலரி இலைகள் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், செலரி சேர்த்து வதக்கவும். இத்துடன் தக்காளி சாஸ், ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, பொரித்த இட்லிகளைச் சேர்த்து இட்லி உடையாதவாறு கிளறவும். தண்ணீர் வற்றி கலவை நன்கு வெந்ததும் இதன்மீது பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள்களைத் தூவி இறக்கவும். 

கறிவேப்பிலைக் குழம்பு





















தேவையானவை :

 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 பூண்டு - 10 பல்
 தேங்காய் - அரை முடி (துருவிக் கொள்ளவும்)
 மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - சிறிதளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
 கடுகு - கால் டீஸ்பூன்
 உளுந்து - கால் டீஸ்பூன்
 குண்டு மிளகாய் - 3
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். பிறகு இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து  வதக்கி சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, குண்டு மிளகாய் சேர்த்துத் தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கிளறவும். பிறகு கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை இத்துடன் ஊற்றி கொதிக்கவிட்டு பச்சை வாசனை போனதும் இறக்கவும் ...

முட்டை குருமா






























தேவையானவை:

 முட்டை - 3
 பெரிய வெங்காயம் - 2
 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
 இஞ்சி - ஒரு சிறிய துண்டு
 பூண்டு - 8
 பச்சைமிளகாய் - 2
 தேங்காய் - அரை மூடி
(துருவிக் கொள்ளவும்)
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டேபிள்ஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முட்டையை அவித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நிறம் மாறி பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு சோம்பு மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைத்து கலக்கவும். இதில் சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து வதக்கவும். கலவை நன்கு கொதி வந்ததும் அவித்த முட்டையை லேசாக கீறிவிட்டு சேர்க்கவும். பிறகு, ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும் ....

கறிவேப்பிலைக் கோழி சுக்கா






















தேவையானவை:

 சிக்கன் - அரை கிலோ
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 மல்லித்தூள் (தனியாத்தூள் ) - ஒரு டேபிள்ஸ்பூன்
 சீரகம் - கால் டீஸ்பூன்
 மிளகு - ஒரு டீஸ்பூன்
 சோம்பு - அரை டீஸ்பூன்
 எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சிக்க‌னை சுத்தம் செய்து விருப்பமான வடிவில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிக்கன், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கனை சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கிளறவும். மிதமான தீயில் சிக்கனை வேக விடவும். தேவையென்றால், தண்ணீர் விட்டுக் கொள்ளலாம். கலவை கிரேவி பதத்தில்தான் வர வேண்டும். இறக்குவதற்கு முன் எலுமிச்சைச்சாறு ஊற்றி இறக்கவும் ..

கருவாட்டுக் குழம்பு





















தேவையானவை:

துண்டு கருவாடு - 200 கிராம்
புளிக்கரைசல் - 200 மில்லி
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 50 மில்லி
கடுகு - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2 பொடியாக நறுக்கவும்
பூண்டு - 10 முழுதாக போடவும்
தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:

சுடுதண்ணீரில் கருவாடை சுத்தம் செய்து சிறிதளவு எண்ணெயில் லேசாக வதக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு, 300 மில்லி தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம், பூண்டு, மல்லித்தழை, சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதில் புளிக்கரைசல் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு கருவாட்டைச் சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடம் வேகவிட்டு இறுதியாக தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்

திருநெல்வெலி மட்டன் குழம்பு





















தேவையானவை :

மட்டன் - அரை கிலோ
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
வேகவைத்த உருளைக்கிழங்கு - 150 கிராம்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

அரைக்க :

தேங்காய் -அரை முடி (துருவிக் கொள்ளவும்)
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிக்க:

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் -2
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

மட்டனை சுத்தம் செய்து , இஞ்சி - பூண்டு விழுது ,மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.இத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சேர்த்து மசாலா வாசனை வரும் வரை வதக்கவும்.பின் வேகவைத்த மட்டன் சேர்த்து வதக்கி அரைத்த விழுது சேர்க்கவும்,பச்சை வாசனை போனதும் கொத்தமல்லித்தழைதூவி இறக்கவும் ..

Tuesday, July 16, 2019

மட்டன் பிரியாணி





















தேவையான பொருட்கள்

பிரியாணி அரிசி - 1/2 கிலோ ( 1/2 மணிநேரம் ஊற வைத்தது)
தக்காளி - 3,
வெங்காயம் - 3,
மட்டன் - 1/2 கிலோ (வேக வைத்தது ),
எண்ணெய், அல்லது நெய் - 1 கப்,
பிரியாணி இலை - 2,
ஏலக்காய் - 2, கிராம்பு - 2,
பெரிய வெங்காயம் - 2 (அரைத்தது),
உப்பு - தேவைக்கு,
பச்சை மிளகாய் - 3,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், 
பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா - 1/2 கப்,
தயிர்  - 1/2 கப்.


செய்முறை

குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி பிரியாணி  இலை,
ஏலக்காய், கிராம்பு சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் உப்பு, பச்சை மிளகாய்,
இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் கொத்தமல்லி, புதினா, தக்காளி, தயிர் சேர்த்து நன்றாக வதங்கிய பின் அரிசி, மட்டனை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
 20 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து  இறக்கவும் ...

சிக்கன் பிரியாணி




























தேவையான பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ,
பிரியாணி அரிசி - 1/2 கிலோ,
பிரியாணி மசாலா - 1½ டீஸ்பூன்,
கொத்தமல்லி,
புதினா - 1 கப்,
வெங்காயம் - 3 (பெரியது),
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
தக்காளி - 3,
பட்டை - 2 கிராம்,
புதினா - 2,
சோம்பு - சிறிதளவு,
பிரியாணி இலை - 2,
கரம் மசாலா -  1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
பட்டை பொடி - 1/4 டீஸ்பூன்,
கிராம்பு பொடி - 1/4 டீஸ்பூன்,
தயிர் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
நெய் - 1/4 கப், எண்ணெய் -  1/4 கப்.


செய்முறை ;

பிரியாணி அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து
பின் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி லேசாக வதங்கி வைத்துக்கொள்ளவும்

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானவுடன்
பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை சேர்த்து
பின்பு பட்டை பொடி, கிராம்பு பொடி, கொத்தமல்லி,
புதினா சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம்,
இஞ்சி, பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து வதக்கி
அதில் சிக்கனை போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம்
 வேக விடவும். பின் தயிர், கரம் மசாலா, மிளகாய்த்தூள்
 மற்றும் பிரியாணி மசாலாவை வதக்கியவுடன்
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கொதி வந்தவுடன்
அதில் அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் 10 முதல் 15 நிமிடம் வைத்து இறக்கிவிடவும் ....

Monday, July 15, 2019

வான்கோழி பிரியாணி

















தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...
வான்கோழி - 2-4 பெரிய துண்டுகள்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
நாட்டுத் தக்காளி - 1 (அரைத்தது)
புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
கல் உப்பு - சிறிது
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்

பிரியாணிக்கு...
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை மிளகாய் - 6 (நீளமாக கீறியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
புதினா - 1 கைப்பிடி அளவு
கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு
நெய் - 1 கப்

தாளிப்பதற்கு...
கிராம்பு - 3
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 6
பிரியாணி இலை - 3
அன்னாசிப்பூ - 2
உலர்ந்த ரோஜாப்பூ இதழ் - சிறிது
குங்குமப்பூ - சிறிது

செய்முறை:

முதலில் வான்கோழியை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ளவும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு
அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை
சேர்த்து பிரட்டி 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும் பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து,
 பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறி, பின் ஊற வைத்துள்ள வான் கோழியை சேர்த்து கிளறி,
1/4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2-3 விசில் விட்டு
இறக்கிக் கொள்ளவும். பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரிசியைப் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி,
தேவையான அளவு உப்பு சேர்த்து, மிதமான தீயில் குக்கரை மூடி விசில் போடாமல் 10 நிமிடம் வைத்து இறக்கிவிடவும் .....

வான்கோழி குழம்பு






















தேவையான பொருட்கள்:

வான்கோழி - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

மசாலாவிற்கு...

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
சோம்பு பொடி - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வான்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வான்கோழி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்து, விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி விழுதை சேர்த்து, 15 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் கிளறி, உப்பு, மல்லித் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள் என அனைத்து மசாலா பொடியையும் தூவி கிளற வேண்டும்.

* மசாலா வாசனை போனவுடன் அதில் வேக வைத்துள்ள வான்கோழியை நீருடன் ஊற்றி கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.

* குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கடைசியாக  இறக்கி கொத்தமல்லியைத் தூவி இறக்கவும் ...

Saturday, July 13, 2019

நீலகிரி சிக்கன் குருமா























தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

அரைப்பதற்கு...:

சீரகம் - 1 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
கசகசா - 1 டீஸ்பூன்,
பட்டை - 1 இன்ச்,
ஏலக்காய் - 2,
துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்,
முந்திரி - 8,
பச்சை மிளகாய் - 4,
கொத்தமல்லி - 3
டேபிள் ஸ்பூன் (நறுக்கியது),
புதினா - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது),
தண்ணீர் - 3 1/2 கப்

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம்,
சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு,
அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கி,
தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்துஇ 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 7-8 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு,
 2 நிமிடம் பிரட்டி, 3 கப் தண்ணீரை ஊற்றி,
20-30 நிமிடம் மூடி வேக வைத்து இறக்க வேண்டும் ...

கேரளா மட்டன் குருமா





















தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
பூண்டு - 5 பல் (நறுக்கியது)
தேங்காய் பால் - 1/2 கப்
பட்டை - 1
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
முந்திரி - 11 (நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்தது)
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு


செய்முறை: முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
சோம்பு மற்றும் கசகசா சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து 3 நிமிடம் கிளறி இறக்கி விட வேண்டும்.

பின்பு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மட்டனை நன்கு கழுவி, அதனை குக்கரில் போட்டு,
தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து,
அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

இறுதியில் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், தேங்காய் பால், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பின் குக்கரில் உள்ள மட்டனை நீருடன் வாணலியில் ஊற்றி,
 நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின்பு அத்துடன் வினிகர், முந்திரி பேஸ்ட் சேர்த்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 

சேலம் மட்டன் குழம்பு


















தேவையான பொருட்கள்:

மட்டன் - 3/4 கிலோ
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பட்டை - 2
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1 மூடி (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 10
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து,
அதில் கழுவி வைத்துள்ள மட்டன்,
மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும்
உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி,
5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய்,
சிறிது கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலியில் உள்ள எஞ்சிய எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி இறக்க வேண்டும்.
அடுத்து, மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து,
அதில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் வதக்கிய அனைத்தையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து,
அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு,
பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் தனியாக எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி, மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 3-5 நிமிடம் வதக்கிவிட வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும்,
அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி,
பின் வேக வைத்துள்ள மட்டனை ஊற்றி,
ஒரு கொதி விட வேண்டும்.
பின் அத்துடன் தேங்காய் கலவையை தவிர,
அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து,
உப்பு போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
இறுதியில் நைஸாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும் ...

Friday, January 11, 2019

ஆட்டிறைச்சி குடல் குழம்பு





















தேவையான பொருட்கள்

குடல் செட் 1 ( பொடியாக  நறுக்கியது )
சின்ன வெங்காயம் 26
தக்காளி 3
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி
பச்சை மிளகாய் 12
பட்டை 1 இன்ச்
கிராம்பு 4
சோம்பு 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1 கப்
வரமிளகாய் துருவல் 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையானஅளவு
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பில்ல கொஞ்சமாக
கொத்தமல்லி இலைகள் 1 கைப்பிடி
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி

செய்முறை

மிக்ஸியில் பட்டை , கிராம்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் அனைத்தையும்,
 சேர்த்து நன்றாக நைசாக விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பிறகு மிக்ஸியில் பச்சை மிளகாய் , தேங்காய் துருவல் மற்றும் சோம்பு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக மையமாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

மிக்ஸியில் தக்காளியை சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

பிரஷர் குக்கரில் எண்ணெய்  விட்டு நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து,
 நன்றாக வெடிக்க ஆரம்பித்த உடன் அதனுடன் கறிவேப்பிலை  சேர்த்து,
நன்றாக வதக்க வேண்டும்.

இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

தக்காளி அரைத்த விழுதையும் மற்றும் தேங்காய் அரைத்த விழுதையும் சேர்த்து,
 நன்றாக வதக்க வேண்டும்.

மஞ்சள்தூள் , வரமிளகாய் தூள் , தேவையான அளவிலான உப்புத்தூள், கரம்மசாலா தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து  நன்றாக பச்சை மணம் போகும் வரை வதக்க வேண்டும்.

இப்பொழுது பொடியாக நறுக்கிய குடல் துண்டுகளை சுத்தமாக சுடுதண்ணீர் ஊற்றி நன்றாக கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூன்று தடவை கழுவி கொள்ள வேண்டும்.

 நன்றாக கழுவிய குடல் துண்டுகளை பிரஷர் குக்கரில் போட்டு நன்றாக வதக்க வேண்டும் அதனுடன் 3 கப் தண்ணீர்சேர்த்து  ,   அதன் பிறகு பிரஷர் குக்கரின் மூடியை மூடி விசில் பொருத்தி மிதமான தீயில் 15 நிமிடங்கள் வைத்து விடவும்.

அதன் பிறகு அடுப்பை அணைத்து விடவும் பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் பிரஷர் குக்கரின் மூடியை திறந்து பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவவும்.

காரைக்குடி ஆட்டு கறி குழம்பு


























தேவையான பொருட்கள்


ஆட்டுகறி - 1/2 கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 4
சீரகம், ‌மிளகு, சோம்பு - தலா 1 தே‌க்கர‌ண்டி
பட்டை, லவங்கம் - ‌சி‌றிது
கா மிளகாய் - 6
இஞ்சி - ‌பெ‌ரிய து‌ண்டு
பூண்டு - 2 முழுதாக
ப மிளகாய் - 4 கீறியது
தே‌ங்கா‌ய் - 1/2 முறி



செய்முறை ‌

க‌றியை வேக வைக்கவும். இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், மிளகு, காய்ந்த மிளகாயை எ‌ண்ணெ‌ய்‌வி‌ட்டு வதக்‌கி அரை‌‌க்கவு‌ம். ‌
வெங்காயத்தையும், தக்காளியையும் நா‌ன்கு து‌ண்டுகளாக அ‌ரி‌ந்து எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வதக்கி அரைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வை‌த்து, எண்ணை‌ய் ஊற்றி, கா‌ய்‌ந்தது‌ம் ‌‌ப‌ச்சை ‌மிளகா‌ய் போ‌ட்டு வத‌‌க்‌கி அரை‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் மசாலாவை‌ப் போடவு‌ம். ‌ ‌
பிறகு த‌க்கா‌ளி, வ‌ெ‌ங்காய ‌விழுதை‌ச் சே‌‌ர்க்கவு‌‌ம்.
இ‌தி‌ல் கறியை போ‌ட்டு தேவை‌ப்ப‌ட்டா‌ல் ‌மிளகா‌ய் பொடியை போ‌ட்டு, தேவையான அளவு உ‌ப்பு சே‌ர்‌த்து வத‌க்‌கி தண்ணீரை ஊற்றி விட்டு அடுப்பில் ‌மிதமான நெரு‌ப்‌பி‌ல் ,
அரை மணி நேரம் வேக வைக்கவும்.
தே‌ங்காயை மைய அரை‌த்து க‌றி வெ‌ந்தது‌ம் சே‌ர்‌த்து இற‌க்கவு‌ம்.

கொழும்பு கோழி குழம்பு


















தேவையான பொருட்கள்;

கோழி இறச்சி 1 Kg -
பச்சை மிளகாய் 10
ஏலக்காய் 5
கருவாப்பட்டை 3
வெங்காயம் 2
மல்லி தூள் 2 தேக்கரண்டி
ஜீரகம் 1 தேக்கரண்டி
ஜீரகம் தூள் 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம்  தூள் 1 தேக்கரண்டி
கறிமசாலா 2 தேக்கரண்டி
எண்ணெய் 4 மேசைக்கரண்டி
மஞ்சள் 2 தேக்கரண்டி
பூண்டு 4 பற்கள்
இஞ்சி பூண்டு அரைத்தது 2 தேக்கரண்டி
தேங்காய் பால் 1 கப்
நல்லமிளகு தூள் தேவைக்கு
கருவேப்பிலை தேவைக்கு
உப்பு தேவையான அளவு

தயாரிக்கும் முறை;

முதலில் இறைச்சியை நன்றாக கழுவி ஓரளவு பெரிய துண்டாக நறுக்கி,
உப்பும் மஞ்சளும் இறைச்சியில் நன்றாக கலந்து இறைச்சியை ஊற வைக்கவும்.
வெங்காயங்களை தனியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைவிட்டு எண்ணை சூடானதும்,
ஏலக்காய் கருவாப்பட்டை பூண்டு கறிவேப்பிலை ஜீரகம் போட்டு வதக்கியதும்,
பச்சை மிளகாயை போட்டு அது வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் போடவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் 1 தேக்கரண்டி மஞ்சள் போடவும்.
மஞ்சள் வாசனை நீங்கியதும் இஞ்சிபூண்டு அரைப்பையும் போட்டு மீதமுள்ள,
 கறிமசாலா ஜீரகம் மல்லி நல்ல மிளகு தூள்களையும் போட்டு
இறைச்சியையும் போட்டு நன்றாக கிறளி மூடி வைத்து 20 நிமிடம் வேக விடவும்.
நன்றாக வெந்ததும் தேங்காய் பால் விட்டு ஓரிரு தடவை கொதித்ததும் பால் பச்சை வாசனை போய் ஓரளவு வற்றியதும் இறக்கிவிடவும் ....

Thursday, January 3, 2019

நாட்டுக்கோழி குழம்பு





















தேவையான பொருள்கள்:

நாட்டுக்கோழி – 1/2 கிலோ
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
தயிர்  – 2 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
மல்லித்தழை – சிறிது
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க வேண்டியவை:
மிளகாய் வத்தல் – 5
கொத்தமல்லி – 5 மேஜைக்கரண்டி
சீரகம் – 1 மேஜைக்கரண்டி
மிளகு – 1 மேஜைக்கரண்டி
தேங்காய் துருவல் – 100 கிராம்
தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
பட்டை – 1 இன்ச் அளவு
கிராம்பு – 2
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
கோழி துண்டுகளை நன்கு சுத்தப்படுத்தி வைக்கவும். தக்காளி, வெங்காயம் மற்றும் மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, சீரகம், மிளகு எல்லாவற்றையும் போட்டு கிளறி அடுப்பை அணைத்து, ஆற விட்டு மிக்ஸ்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும். தேங்காயையும் நன்கு வறுத்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பில்லை, வெங்காயம்,  பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் தயிர், அரைத்து வைத்துள்ள பொருட்கள் மற்றும் கரம் மசாலா தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு  நிமிடம் கிளறி அதனுடன் உப்பும் கோழித்துண்டுகளையும் சேர்த்து மசாலா எல்லா இடங்களிலும் படும்படி நன்கு கிளறி விட்டு  அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு கொதித்து கறி வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார்.

பகரா பேங்கன்




















தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - கால் கிலோ
தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
வெங்காயம் - 100 கிராம்
தனியா - 3 டீஸ்பூன்
எள், சீரகம் - தலா 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப
வேர்க்கடலை - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
எண்ணெய், சீரகம் - தாளிக்க தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வாணலியில் தனியா, எள், வேர்க்கடலை, சீரகம், மிளகு, முந்திரியைத் தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து நைஸாகப் பொடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய தக்காளி போட்டு வதக்கியதும், அதனுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து மேலும் வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கி, பின்னர் அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கவும்.
பிறகு புளிக்கரைசல், அரைத்த மசாலா பொடி, மசாலா விழுது சேர்த்து வதக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, கத்திரிக்காயுடன் சேர்த்து, எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.
இதை  சப்பாத்தி, இட்லியுடன் சாப்பிடலாம் ..

காளான் கிரேவி























தேவையான பொருட்கள்:

காளான் - 200 கிராம்

 மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

அரைப்பதற்கு...

வெங்காயம் - 1
தக்காளி - 2
பட்டை - 1 இன்ச்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 2 சிட்டிகை



செய்முறை:

காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதனை இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் காளானை சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு அதில் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும் ..

மட்டன் குடல் குழம்பு
























தேவையான பொருட்கள் :

ஆட்டு குடல் – முக்கால் கிலோ
வெங்காயம் – 4
தக்காளி – 4
தேங்காய் – ஒரு மூடி அரைத்தது (கசகசாவுடன்)
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா – கொஞ்சம்
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி, புதினா – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
குக்கரில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு,
மஞ்சள் தூள் சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி ,பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின்
 நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி சேர்த்து மைய வதக்கவும்.
இப்பொழுது மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அடுத்து வேக வைத்த குடலை போடவும்.
நன்றாக கொதி வரும் போது அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
ஓரங்களில் எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வரும் போது கொத்தமல்லி, புதினா தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

சப்பாத்தி ,தோசை, இட்லிக்கு சரியான டிஷ் இந்த மட்டன் குடல் குழம்பு..

உருளைக்கிழங்கு முட்டைக்கறி

























தேவையான பொருட்கள் :

முட்டை – 6
உருளைக்கிழங்கு – 100 கிராம்
வெங்காயம் – 50 கிராம்
தேங்காய் – கால் மூடி
எலுமிச்சம் பழம் – 1
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு – 25 கிராம்
பச்சைமிளகாய் – 8
கடுகு – அரை தேக்கரண்டி
நெய் – 25 கிராம்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – 4 கொத்து.



செய்முறை :

முட்டையை வேக வைத்து தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு சூடானதும் கடுகு, முந்திரி போட்டு சிவந்ததும்,
வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த தேங்காய் விழுது
சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
தேங்காய் கொதித்து பச்சை வாடை போனவுடன்
முட்டை, உருளைக்கிழங்கு,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து
10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
கடைசியாக கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

வீட்டு மசாலா சிக்கன் குழம்பு

























தேவையான பொருட்கள் :

சிக்கன் – அரை கிலோ
தேங்காய் (துருவியது) – 1 கப்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 6
பச்சை மிளகாய் – 6
தேங்காய் எண்ணெய்
சின்ன வெங்காயம் -1
பெரிய வெங்காயம் -1
தக்காளி – 1
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
வெந்தயத்தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்- ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
சின்னவெங்காயம், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும்
அதில் தேங்காய் துருவலை போட்டு வறுத்த பின்னர் அதோடு கொத்தமல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா பொடி, மஞ்சள் தூள் யாவும் போட்டு சிறிது கிளறி விடவும்.
கலவை பொன்னிறமாக வந்ததும் அதனை விழுதாக அரைத்துத் தனியாக வைத்து கொள்ளவும்.
அதே கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
இப்போது சிக்கன் துண்டுகளைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து மெதுவாக கிளறவும்.
பின்னர் இரண்டு கப் நீர் ஊற்றி மெதுவாக கிளறி விடவும்.
இப்போது பாத்திரத்தை மூடி சிக்கனை வேக விடவும்.
பாத்திரத்தைத் திறந்து நறுக்கி வைத்த பெரிய வெங்காயம்,
தக்காளி ஆகியவற்றைப் போட்டு மேலும் சிறிது தண்ணீர் ஊற்றவும்.
இப்போது பாத்திரத்தை மூடி 20 நிமிடங்கள் மறுபடியும் வேக வைக்கவும்.
பின்னர் மூடியைத் திறந்து அரைத்து வைத்த தேங்காய் மசாலா
விழுதினை போட்டு நீர் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
சிறிது கறிவேப்பிலை போட்டு குறைவான தீயில் 5 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும் .. 

யாழ்ப்பாண தேங்காய் பால் மீன் குழம்பு























தேவையான பொருட்கள்


கழுவிய மீன் துண்டுகள் – 500 கிராம்
வெட்டிய வெங்காயம் – 100 கிராம்
வெட்டிய பச்சை மிளகாய் – 04
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பழப்புளிக் கரைசல் – 1 கப்
தேங்காய்ப்பால் – 03 கப் (முதற்பால் உட்பட)
கருவேப்பிலை – தேவையான அளவு


செய்முறை

ஒரு பாத்திரத்தில்,மீன் துண்டுகள்,  வெங்காயம் , பச்சை மிளகாய்,
கருவேப்பிலை என்பவற்றைப் போடவும்.
அதனுடன்,தேங்காய்ப் பால், பழப்புளிக் கரைசல், உப்பு,
மிளகாய்த் தூள் என்பவற்றையும் சோ்த்துக் கொள்ளவும்.
சேர்த்த கலவையை நன்றாகக் கலக்கவும்.
பாத்திரத்தை அடுப்பில்  மிதமான சூட்டில் வைக்கவும்.
மீன் குழம்பு நன்றாகக் கொதித்து, எண்ணெய் வரும்போது,
அதனுடன், மிளகு, நற்சீரகம்,
உள்ளி(சிறு வெங்காயம்)  என்பவற்றை  இடித்துப் போடவும்.