Thursday, April 7, 2016

மகாராஷ்டிரா முட்டை குழம்பு


Saoji Maharashtrian Egg Curry


தேவையான பொருட்கள்: 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
தேங்காய் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் 
காஷ்மீரி வர மிளகாய் - 5 
ஜாதிக்காய் - 1 
கசகசா - 1/2 டீஸ்பூன் 
மல்லி - 1/2 டீஸ்பூன் 
சோம்பு - 1/4 டீஸ்பூன் 
சீரகம் - 1/4 டீஸ்பூன் 
பட்டை - 2 
ஏலக்காய் - 3 
கிராம்பு - 3 
தக்காளி - 3 (நறுக்கியது) 
பசலைக்கீரை - 1/4 கப் 
வேக வைத்த முட்டை - 4 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது 

செய்முறை: 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, மல்லி, ஜாதிக்காய், காஷ்மீரி வர மிளகாய், பட்டை, ஏலக்காய், கிரம்பு, சீரகம் சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய் பொடியையும் சேர்த்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும். பின் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து மிதமான தீயில் தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். பிறகு அதில் பசலைக்கீரை சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டிப் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு ரெடி!!!

பேச்சுலர் சாம்பார்


Bachelor Sambar Without Dal Recipe


தேவையான பொருட்கள்: 

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
கறிவேப்பிலை - சிறிது 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய - 1 (நீளமாக கீறியது) 
தக்காளி - 2 (நறுக்கியது) 
சாம்பார் பவுடர் - 2-3 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
சர்க்கரை - 1/2 டீஸ்பூன் 
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது 

செய்முறை: 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, சாம்பார் பொடி சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறினால், பேச்சுலர் சாம்பார் ரெடி

மட்டன் லிவர் மசாலா





தேவையான பொருட்கள்:
 மட்டன் லிவர்/ஈரல் - 500 கிராம்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தேங்காய் பொடி - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - 1
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
 எலுமிச்சை - 1
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு

 செய்முறை:
முதலில் ஈரலை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது பால் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 சிட்டிகை மிளகாய் தூள், உப்பு, எண்ணெய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள ஈரலை சேர்த்து 5 நிமிடம் கிளறி வேக வைத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தேங்காய் பொடி மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி 5-10 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும். மசாலா நன்கு வெந்ததும், அதில் ஈரல் துண்டுகளை சேர்த்து கிளறி, மூடி வைத்து 2-3 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை சாற்றினை மேலே பிழிந்தால், மட்டன் லிவர் மசாலா ரெடி!!!