Thursday, March 29, 2018

கூட்டாஞ் சோறு






















தேவையான பொருள்கள் -

அரிசி - 1 கப் (200 கிராம்)
துவரம்பருப்பு - 75 கிராம்
காயம் - ஒரு சிட்டிகை
முருங்கைக்காய் - 8 துண்டுகள்
கத்தரிக்காய் - 1
வாழைக்காய் - 1 (சிறியது)
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1
மாங்காய் - 4 துண்டுகள்
தக்காளி - 1
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - 3/4 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது       

           
தாளிக்க -

கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - சிறிது   

                             
செய்முறை -

முதலில் புளியை 1 கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். தக்காளி மற்றும் அனைத்து காய்களையும் நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும்.                                               
குக்கரில் அரிசி, பருப்பு, நறுக்கிய காய்கறிகள், தக்காளி, சாம்பார்பொடி, மஞ்சள்தூள், உப்பு, காயம், புளித் தண்ணீர் மற்றும் 3 கப் தண்ணீர் (மொத்தமாக 4 கப்) ஊற்றி நன்றாக கிளறி மூடிபோட்டு அடுப்பில் வைக்கவும்.
முதல் விசில் வந்ததும் சிம்மில் வைத்து 12 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்கு கிளறி விடவும். இறுதியில் கொத்தமல்லித் தழையையும், தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறவும்.                       
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை, வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொவன்றாக போட்டு தாளித்து சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி வைக்கவும். 

வெங்காய சாம்பார்



















தேவையான பொருள்கள் -

துவரம் பருப்பு - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1/2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
காயம் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு       
                   
அரைக்க -

தேங்காய் - 3 மேஜைக்கரண்டி

தாளிக்க -

நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - சிறிது       
                                                 
செய்முறை -

புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
 தக்காளியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
தாளிக்க கொடுத்துள்ள சின்ன வெங்காயத்தை மட்டும் சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
மீதமுள்ள சின்ன வெங்காயத்தை நறுக்க தேவையில்லை.
தேங்காயை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.                   
குக்கரில் துவரம் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவு தண்ணீர், காயம் சேர்த்து அடுப்பில் வைக்கவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.
அடுப்பில் கடாய் வைத்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி தனியே எடுத்து வைக்கவும். 
அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.                   
ஒரு பாத்திரத்தில் வதக்கிய வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு, கரைத்த புளித் தண்ணீருடன் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். மசாலா வாடை போனதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.       
கடைசியாக வேக வைத்த பருப்பை சேர்த்து கொதி வந்ததும் சிறிது மல்லித் தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயத்தை  போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு பொன்னிறமானதும் எடுத்து குழம்பில் ஊற்றி நன்கு கலந்து விடவும்.   

அவியல்




















தேவையான பொருள்கள் -

முருங்கைக்காய் -  2
வாழைக்காய் - 1
உருளைக்கிழங்கு - 1
கேரட் - 1
மாங்காய் - 1/2
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிது                           
அரைக்க -
தேங்காய்த் துருவல் -1 கப்
சின்ன வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 2 மேஜைக்கரண்டி     
                     
செய்முறை

காய் அனைத்தையும் நறுக்கி தண்ணீரில் உப்பு சேர்த்து  வேக விடவும்.                     
10 நிமிடம் கழித்து அல்லது காய் வெந்ததும் தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.         
அரைக்கக் கொடுத்தவற்றை கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் அரைத்த விழுதை சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விடவும்.           
பின்னர் வேக வைத்த காய்களை சேர்த்து கட்டியானதும் இறக்கி விடவும்.       
இறக்கிய பின்னர் தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து கிளறி விடவும்.

பின் குறிப்புகள் -
மாங்காய்க்குப் பதிலாக சிறிது புளியை ஊற வைத்து கரைத்து அதை சேர்த்துக் கொள்ளலாம்.
எண்ணெய், கருவேப்பில்லையுடன் 4 மேஜைக்கரண்டி தயிரை சேர்த்து கிளறினால் இன்னும் சுவையாக இருக்கும்.

Tuesday, March 13, 2018

மட்டன் உப்புக் கறி





















தேவையானவை-

மட்டன் - 1/2 கிலோ

சிவப்பு மிளகாய் - 10 (விதைகள் நீக்கியது)

சின்ன வெங்காயம் - 12

பூண்டு - 10 பல்

உப்பு - 2 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

கருவேப்பிலை - 1 இணுக்கு





செய்முறை-





மட்டனைக் கழுவி பிரஷர் குக்கரில் நன்கு வேக விடவும்.

சட்டியில்  எண்ணெயைக் காயவைக்கவும்.

அதில் உளுந்து , சோம்பு தாளித்து மிளகாயைப் போடவும்.

பின்  தோலுரித்து இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்க்கவும்.

அதில் வெந்த மட்டனைப் போட்டு நன்கு வதக்கவும்.

சிறிது தண்ணீர் தெளித்து 20 நிமிடம் சிம்மில் வேக விடவும்.

அவ்வப்போது கிளறி விடவும். உப்பு சேர்த்து இன்னும் 2 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும் 

காரைக்குடி மட்டன் குழம்பு



















தேவையானவை -


மட்டன் - 1/2  கிலோ
சின்ன வெங்காயம் - 30
பூண்டு - 20 பல்
தக்காளி - 2
புளி - 4  சுளை
உப்பு - 2 டீஸ்பூன்.

அரைக்க -

வரமிளகாய் - 15
கொத்துமல்லி - 2  டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 20
கசகசா - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 4  பல்

தாளிக்க -


சோம்பு - 1/4 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1
இஞ்ச் - சிறியது
பிரியாணி இலை   - 1
கல்பாசிப்பூ - 1
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை -

மட்டனை சுத்தம் செய்து பிரஷர் குக்கரில் சிறிதளவு தண்ணிரில் நன்கு வேக வைக்கவும் . வெங்காயம் பூண்டை தோலுரித்து., இரண்டாக அரிந்து கொள்ளவும். தக்காளியைத்துண்டுகள் செய்யவும். புளியையும் உப்பையும் 1 டம்ளர் தண்ணீரில் ஊறப் போடவும். வாணலியில்
அரை ஸ்பூன் எண்ணையில் மிளகாய்., மல்லி., சோம்பு., சீரகம்., மிளகு., கசகசாவை
வறுக்கவும். இத்துடன் வெங்காயம் ., பூண்டு சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு., பட்டை., கிராம்பு., இலை., கல்பாசிப்பூ., கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். வெங்காயம் ., பூண்டு., தக்காளி போட்டு வதக்கி., அரைத்த மசாலாவை சேர்க்கவும். பக்கங்களில் எண்ணைய் பிரியும் வரை வதக்கி., புளித்தண்ணீரையும் வேகவைத்த மட்டனையும் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் சிம்மில் 20 நிமிடம் வேகவைத்து மட்டன் வெந்ததும் இறக்கவும். 

வெங்காயம் பூண்டு குழம்பு


























தேவையானவை-


சின்ன வெங்காயம்..:- 50 கி
வெள்ளைப்பூண்டு:- 50 கி
தக்காளி..:- 1 பெரியது
சாம்பார் பொடி :- 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி :- 1/4 டீ ஸ்பூன்
புளி :- எலுமிச்சை அளவு..
உப்பு :- 2 டீஸ்பூன்
எண்ணெய்:- தாளிக்கத்தேவையான அளவு
1 டேபிள்ஸ்பூன் இருக்கலாம்.
கடுகு :- 1 டீஸ்பூன்
உளுந்து :- 1 டீஸ்பூன்
பெருங்காயம்:- ஒரு துண்டு
சீரகம் :-1/2 டீஸ்பூன்
வெந்தயம்:- 1/2 டீஸ்பூன்
சோம்பு:- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை .:- 1 இணுக்கு
தண்ணீர் :- 3 கப்


செய்முறை-


வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போடவும்.
கடுகு வெடித்ததும்., பெருங்காயம் போட்டுப் பொறிந்ததும்.,
உளுந்து., சீரகம்., சோம்பு.,வெந்தயம் போட்டுப் பொன்னிறமானதும்.,
சுத்தம் செய்து இரண்டாக நறுக்கப்பட்ட வெங்காயம்., பூண்டு., தக்காளி போட்டு
எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.
சாம்பார்பொடி., மஞ்சள் பொடி போட்டு உப்பும் புளியும் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
நன்கு கொதித்து வந்தவுடன்..
தீயின் அளவை குறைத்து  10 நிமிடம் கழித்து பூண்டு  வேக்காடு பார்த்து இறக்கவும்.

செட்டிநாட்டு அன்னாசி பழ - ரசம்






















தேவையானாவை-

அன்னாசி பழ  துண்டுகள் -  4 (சிறியது)
வெந்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
புளி - 1 நெல்லி அளவு
உப்பு - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 4 பல்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
மிளகு ஜீரகப் பொடி - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை- 1 இணுக்கு
பெருங்காயம் - 1 /8 இன்ச் துண்டு
கொத்துமல்லித்தழை - 1 டீஸ்பூன் நறுக்கியது


செய்முறை -

அன்னாசி பழத்தை  மசிக்கவும். தக்காளியை கரைக்கவும்.
புளியை 3 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும் .
இதில் வெந்த துவரம் பருப்பு., அன்னாசி பழம் ., தக்காளி.,
நசுக்கிய பூண்டு., மஞ்சள் பொடி., உப்பு., தனியா தூள்.,
மிளகு ஜீரகப் பொடி., சேர்க்கவும். சட்டியில்  எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., ஜீரகம்., வெந்தயம் பெருங்காயம் போட்டு., ரெண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., கருவேப்பிலை போடவும்.
இதில் புளிக்கரைசலை ஊற்றி நு்ரைத்துக் கொதிவரும் நிலையில்
இறக்கி  கொத்துமல்லி தூவி  விடவும் ...

Sunday, March 11, 2018

ஆந்திர நண்டு வறுவல்


















தேவையான பொருட்கள் :

நண்டு - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு

வதக்கி அரைக்க:

பூண்டு பல் - 10
மிளகு - 2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வதக்கி ஆறவைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.

நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம் போட்டு சிவக்க வதக்குங்கள். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த மசாலா,  மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், 
உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும் 
அடுத்து அதில் நண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நண்டு வெந்து, மசாலா கெட்டியாகி நண்டுடன் சேர்ந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்