Tuesday, December 15, 2020

கோரி ரொட்டி சிக்கன் கிரேவி












தேவையான பொருட்கள்: 


சிக்கன் - 1 கிலோ (சுத்தமாக கழுவியது)

 வெங்காயம் - 1 (நறுக்கியது) 

தேங்காய் பால் - 1/2 கப் (கெட்டியானது)

 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்

 சீரகம் - 1 டீஸ்பூன் 

மல்லி தூள் - 1 டீஸ்பூன் 

பட்டை - 1 

கிராம்பு - 3 

ஏலக்காய் - 3 

வரமிளகாய் - 4 

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) 

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 

புளி தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 


செய்முறை:

 முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 

வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும். 

பின்னர் வதக்கி இறக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் 

துருவிய தேங்காயை சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி 

வரமிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது, கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து 

நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும். 

பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயப் பேஸ்ட், மஞ்சள் தூள், மல்லி தூள், புளி தண்ணீர், தேங்காய் பால் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து, கொதிக்க விட வேண்டும். மசாலா கொதித்ததும், 

அதில் சிக்கன் துண்டுகளை போட்டு, சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, 

மூடி போட்டு சிக்கன் வேகும் வரை கொதிக்க விட்டு, மசாலா ஓரளவு கெட்டியான பின் இறக்க வேண்டும்.


பெப்பர் சிக்கன் கிரேவி






தேவையான பொருட்கள்: 


* சிக்கன் - 500 கிராம்

 * தேங்காய் எண்ணெய் - 1/4 கப் 

* பிரியாணி இலை - 1 

* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

 * பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)

 * இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

 * தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) 

* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

 * மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 

* கரம் மசாலா - 2 டீஸ்பூன் 

* உப்பு - தேவையான அளவு

 * கொத்தமல்லி - சிறிது 


வறுத்து அரைப்பதற்கு... 


* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

 * சோம்பு - 1 டேபிள் ஸ்பூன் 

* பட்டை - 1 துண்டு 

* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

 * மல்லி - 2 டேபிள் ஸ்பூன்

 * வெங்காயம் - 1 (நறுக்கியது) 


செய்முறை:


 * முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

 * பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, சிக்கனைப் போட்டு, 

சிறிது உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். 

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், 

அரைப்பதற்கு கொடுத்துள்ள மசாலாப் பொருட்களை சேர்த்து வறுத்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி இறக்கி, ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 * பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 

* பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். 

* அதன் பின்பு தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கிய பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விடவும். 

* பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு கிளறி விடவும்.

 * இப்போது வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும் ...