Sunday, April 14, 2013

தஹி கோஸ்ட்: மட்டன் ரெசிபி




தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத ஆட்டுக்கறி - 500 கிராம் 
தயிர் - 500 கிராம் 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 2 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 3 டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன் 
சீரகப் பொடி - 2 டேபிள் ஸ்பூன் 
பிரியாணி இலை - 1 
மிளகு - 1 டீஸ்பூன் (பொடி செய்தது) 
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை: 

முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் மஞ்சள் தூள், மிளகுப் பொடி, உப்பு, தயிர், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்.பச்சை மிளகாய் போட்டு கலந்து, கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து கலந்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை போட்டு தாளித்து, வெங்காயம் மற்றும் மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு தக்காளி, மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் சீரகப் பொடி போட்டு கிளறி, எண்ணெயும் மசாலாவும் தனியாக பிரியும் வரை வதக்கவும். பின் ஊற வைத்துள்ள மட்டனை போட்டு, அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, மட்டன் வேகும் வரை நன்கு கொதிக்க விட்டு, சற்று கெட்டியான கிரேவி போல் வந்ததும், இறக்க வேண்டும்.


மல்வானி சிக்கன் குழம்பு




தேவையான பொருட்கள்: 

சிக்கன் - 500 கிராம் (சிறு துண்டுகளாக வெட்டப்பட்டது) 
வெங்காயம் - 4 (நறுக்கியது) 
தேங்காய் - 1 கப் (துருவியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பட்டை - 1 இன்ச் 
மிளகு - 5 
ஏலக்காய் - 2 
அன்னாசி பூ - 1 
பிரியாணி இலை - 1 
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா பவுடர் - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு



சிக்கனை ஊற வைப்பதற்கு... 

இஞ்சி - 1 இன்ச்
 பூண்டு - 5 பல் 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 4 
கொத்தமல்லி - 1/2 கட்டு 
ஜாதிக்காய் பொடி - 1 டீஸ்பூன் 
உப்பு - 2 டீஸ்பூன்

செய்முறை: 

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவி, தண்ணீர் முழுவதையும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கனை ஊற வைப்பதற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் அரைத்துக் கொண்டு, அதனை சிக்கனுடன் சேர்த்து நன்கு கலந்து, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சீரகம், பட்டை, மிளகு, அன்னாசி பூ, ஏலக்காய் சேர்த்து வதக்கி, பின் அதில் பாதி வெங்காயத்தை போட்டு, நன்கு 3-4 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் துருவிய தேங்காயை போட்டு, அடுத்த 3-4 நிமிடம் வதக்கி, பின் அதனை இறக்கி குளிர வைத்து, நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை சேர்த்து, மீதமுள்ள வெங்காயத்தையும் போட்டு, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும். பின் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு, 3-4 நிமிடம் வதக்கி, உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து, 2-3 நிமிடம் மசாலாக்கள் அனைத்தும் சிக்கனுடன் சேருமாறு பிரட்ட வேண்டும். அடுத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்றி, வேண்டிய அளவில் தண்ணீர் சேர்த்து, குழம்பை நன்கு 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான மல்வானி சிக்கன் குழம்பு ரெடி!!! 
இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

மட்டன் மசாலா



தேவையான பொருட்கள்: 

மட்டன் - 1/2 கிலோ 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
 மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
 பட்டை - 1 இன்ச் 
கிராம்பு - 4 
மிளகு - 6 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
தண்ணீர் - 3/4 கப் 
கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - 
தேவையான அளவு உப்பு - தேவையான அளவு

 செய்முறை: 

முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, மிளகு போட்டு வதக்கி, பின் மட்டன் சேர்த்து சிறிது நேரம் கிளறி, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அதோடு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், உப்பு மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, வேக வைத்து இறக்கிய மட்டனை கலவையை ஊற்றி, மசாலா சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு, இறக்க வேண்டும். இப்போது நல்ல காரமான மட்டன் மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி, சாதத்துடன் பரிமாறலாம்.

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி


தேவையான பொருட்கள்

சிக்கன் - ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி - 3/4 கிலோ
எண்ணெய் - 200 கிராம்
பட்டர் - 50 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
தயிர் - 1/2 லிட்டர்
ப்ரைடு ஆனியன் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - ஒன்று
பட்டை - ஒரு சிறிய துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 5
பிரிஞ்சி இலை - 2
ஷாகிஜீரா - 2 தேக்கரண்டி
கருப்பு ஏலக்காய் - 2
ஜாதிபத்திரி - சிறிதளவு
கொத்தமல்லி தழை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
குங்குமப்பூ (அ) ரெட் கலர் தூள் - சிறிதளவு

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பொடி வகைகள் மற்றும் வாசனை பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ப்ரைடு ஆனியன் கடைகளில் கிடைக்கிறது. இல்லையெனில் பல்லாரி வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி அரை தேக்கரண்டி அரிசிமாவை அதில் தூவி கைகளால் நன்கு பிசறி எண்ணெயில் போட்டு பொன்னிறமானதும் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

சிக்கனை சுத்தம் செய்து கழுவி அதில் 50 மி.லி எண்ணெய், இஞ்சி பூண்டு விழுது, 2 பச்சை மிளகாய், தயிர், உப்பு, அரைத்த மசாலா பொடி, சிறிதளவு பட்டை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் சிறிதளவு உப்பு, 2 ஏலக்காய், ஒரு பச்சை மிளகாய், 2 கிராம்பு, ஒரு பிரிஞ்சி இலை, சிறிதளவு பட்டை, சிறிதளவு ஷாகிஜீரா ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்திருக்கும் அரிசியை போட்டு சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து அரை பதமாக வேக வைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டர் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்த சிக்கன் கலவையை போட்டு 1 1/2 டம்ளர் (350 ml) தண்ணீர் ஊற்றி சிக்கனை சமப்படுத்தி விடவும்.

சிக்கன் கலவையின் மேல் வேக வைத்த சாதத்தை கொட்டி நன்கு பரப்பி விடவும்.

அதன் மேல் ப்ரைடு ஆனியன், மல்லி தழை, புதினா போன்றவற்றை சுற்றிலும் போடவும். கடைசியாக குங்குமப்பூவை பாலில் கரைத்து ஆங்காங்கே தெளித்து விடவும். கலர்பொடி என்றால் இருகலர் பயன்படுத்தலாம். கலர்பொடி சேர்ப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதனால் குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளவும்.

பாத்திரத்திலிருந்து நீராவி வெளியில் செல்லாதவாறு மூடி போட்டு கொள்ளவும். இதுப்போல் க்ளாஸ் மூடியில் ஆவி வெளியே செல்லாது. 1/2 மணி நேரம் மிதமான தீயில் வைக்கவும். இடையிடையே திறக்க கூடாது. ஸ்டீம் வெளியே சென்றால் சாதம் அடியில் பிடித்து விடும். (சாதரணமூடி என்றால் அலுமினியம் பாயில் போட்டு ஒட்டி விட்டு அதன் மேல் மூடி போடவும். அல்லது பாத்திரத்தை சுற்றிலும் சப்பாத்தி மாவை ஒட்டி அதன் மேல் மூடி போடலாம்.)

அரைமணி நேரம் கழித்து அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி விடவும். இப்போது பிரியாணி தயாராகி இருக்கும். வெயிட் அதிகம் இல்லாத கரண்டியினால் சாதத்தை மெதுவாக பிரட்டி விடவும்.

சுவையான ஹைதராபாத் சிக்கன் பிரியாணி தயார். விரும்பினால் முந்திரி, திராட்சை, போன்ற நட்ஸ் வகைகளை பட்டரில் ப்ரை செய்து போடலாம். ஒரு சிலர் இன்னும் நிறைய வாசனை பொருட்கள் சேர்ப்பார்கள். இதில் கொடுத்துள்ளவை மற்றும் சேர்த்தாலே சுவை நன்றாக இருக்கும்.

நன்றி - இணையம்