தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு – 1/2 கப்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 2
முருங்கைக்காய், கத்திரிக்காய், கேரட், உருளைக்கிழங்கு – தலா ஒன்று
வெண்டைக்காய் – 4
பூசணிக்காய் – சிறிய துண்டு
மாங்காய் – 4 சிறிய துண்டு
புளி – சிறிய எலுமிச்சை அளவு உருண்டை
பெருங்காயம் – சிறிய துண்டு
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கடுகு , உளுந்து – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 1
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சாம்பார் பொடிக்கு
மிளகாய் வற்றல் – 7
கொத்தமல்லி – 1.5 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
கழுவிய துவரம்பருப்பை குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி
8 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.
புளியை 1 கப் தண்ணீரில் ஊறவைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
வாணலியை லேசாக சூடாக்கி கொத்யமல்லியை சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவும்.
கொத்தமல்லி நிறம் மாறும் போது சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பின் மிளகாய் வற்றல் சேர்த்து லேசாக வறுக்கவும். பின் மிக்சியில் நைசாக பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து
மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம், சின்ன வெங்காயம்,
பச்சை மிளகாய், நறுக்கிய கேரட் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
முருங்கைக்காய், கத்திரிக்காய் பாதி வெந்ததும் வதக்கிய பொருட்களை சேர்த்து வேகவிடவும்.
காய்கறிகள் வெந்ததும் நறுக்கிய பூசணிக்காய், மாங்காய், புளிக்கரைச்சல், மஞ்சள்தூள்,
அரைத்த சாம்பார் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மூடி வைத்து கொதிக்கவிடவும்.
பின் பெருங்காயம் மற்றும் வேகவைத்த துவரம்பருப்பு
மேலும் 1 கப் தண்ணீர் ஊற்றி கலந்து மிதமான சூட்டில் வைத்து 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
சாம்பார் நன்கு கொதித்ததும் கிள்ளிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து சூடான சாம்பாரில் கலந்து கொள்ளவும் ....