தேவையான பொருட்கள்
மீன் - 500 -கிராம்
தக்காளிப் பழம் - 2
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
பூண்டு – 10 பல்
இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன்
புளிக் கரைசல் - 1/2 கப்
கடுகு – 1ஸ்பூன்
பெருஞ்சீரகம் - ½ ஸ்பூன்
வெந்தயம் – 1ஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
தேங்காய் பால் - 1 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
தயிர் – 1 ஸ்பூன்
சீரகம்,மிளகு,பூண்டு அரைத்து - 1 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு, இஞ்சி பூண்டு விழுது
சேர்த்து பிரட்டி வைத்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடானதும் கடுகு, சீரகம்,வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் பூண்டு, கறிவேப்பிலை,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய் தூள் ,உப்பு,கரைத்து வைத்துள்ள புளிக் கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்ததும் மீனை சேர்க்கவும்.
மீன் பாதி வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து மூடி விடவும்.
மீன் வெந்து குழம்பு நன்கு கெட்டி பதத்திற்கு வந்ததும் கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து இறக்கவும் ...
No comments:
Post a Comment